ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…
ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தை இஸ்ரேல் தாக்கிய காணொளி ஆதாரம்.
இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் விமானப்படையால் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளம் தீடீர் என தாக்கப்பட்டது.
இந்த தாக்குதல் “ஓபரேசன் ரைசிங் லயன்” (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) மற்றும் மொசாட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த தாக்குதலில் இஸ்ஃபஹானில் உள்ள யுரேனியம் மாற்று வசதி (Uranium Conversion Facility) மற்றும் எரிபொருள் தகடு உற்பத்தி ஆலை உள்ளிட்ட முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் சில அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதன் ஆதாரங்களே தற்பொழுது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

