பொதுப்படுகடன் திணைக்களம் மூடப்பட்டது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப்படுகடன் திணைக்களத்தை மூடி, அத்திணைக்களத்தின் ‘Lanka Secure ‘ பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்துக்கு இடமாற்றுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுள் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாகத் தொழிற்படத் தொடங்கியதுடன் முன்னர் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகடன் முகாமைத்துவத் தொழிற்பாடுகளின் முழுமையாக கடமைகளையும் பொறுப்பேற்றது. இவ்விடமாற்றமானது நிறுவனம் சார்ந்த பொறுப்புக்கூறலை வலுப்படுத்தி, இலங்கையின் படுகடன் முகமைத்துவக் கட்டமைப்பின் செயற்திறனையும், வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது.

2 thoughts on “பொதுப்படுகடன் திணைக்களம் மூடப்பட்டது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *