சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நல்லதண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி காரணமாக நேற்று (மார்ச் 28) காலை முதல் கணிசமான எண்ணிக்கையான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைதந்தவண்ணம் உள்ளனர்..
இதனால் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக யாத்திரிகர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளது.
நல்லதண்ணியில் அமைந்துள்ள நான்கு வாகன நிறுத்துமிடங்களும் யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளால் நிரம்பி வழிகின்றன.
இதன் காரணமாக நல்லதண்ணி – மஸ்கெலியா வீதியின் இருபுறமும் ஏனைய வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்ததடுத்த வாரங்களில் இந்நிலைமை மோசமடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. காரணம் சிங்கள – தமிழ் புதுவருடத்தை ஒட்டி நீண்ட விடுமுறை நாட்கள் வருகின்றமையினாலும் வருகின்ற மே மதத்துடன் சிவனொளிபாதமலைக்கான யாத்திரை காலம் முடிவடைவதனாலும் பெரும்பாலான யாத்திரைகள் எதிர்வரும் வாரங்களில் இங்கு வரக்கூடும் என்பதனால். போக்குவரத்துதொடர்பில் சற்று அவதானமாக இருப்பது சிறப்பென குறிப்பிடுகின்றோம்.
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…