Categories: Local

அமெரிக்காவின் வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் – சஜித்

அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ரம்புக்கனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத தீர்வை வரியினை விதித்துள்ளார். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உலக நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்குமென முன்னதாகவே நாம் அரசாங்கத்திற்கு அறியப்படுத்தினோம். 

அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்ற உளநல பிரச்சினை காரணமாகவே இது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 

தற்போது இந்த பிரச்சினையை ஆராய்வதற்குக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரொருவர் கூறுகின்றார். 

முன்னதாக நாம் கூறிய விடயத்திற்குச் செவிசாய்த்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தால் குறைந்தபட்சம் வரி வீதத்தையேனும் குறைத்திருக்கலாம். 

தற்போது இந்த வரி அறவிடப்படுமானால் நாட்டில் பொருளாதார பேரழிவு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Doneproduction

Recent Posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30…

1 hour ago

ஹௌதி இயக்கம் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை

ஈரானின் அணு நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கா இந்த போரை முடிக்க முடியும் என நினைத்தால் அது பிழையான நம்பிக்கை…

1 hour ago

தளபதியின் ஒரு பட சம்பளம்…இத்தனை கோடியா?

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து…

1 hour ago

ஜப்பானை உலுக்கிய நில அதிர்வு

ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது. இந்த…

1 hour ago

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்த உலக நாடுகள்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை பல வெளிநாட்டு நாடுகள் கண்டித்துள்ளன. சில நாட்டுத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மற்றவர்கள் அமைதிக்கு…

1 hour ago

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை!

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சமீபத்தில் உயர்த்தப்பட்ட உணவு விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற அவைக் குழு…

1 hour ago