தான் என்ன செய்தாலும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு இந்த நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
நோர்வே நாட்டு நோபல் குழுவினர் இந்த பணியை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது
நடப்பாண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, நான் என்ன செய்தாலும், ” எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” என அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல ஆண்டுகளாக நடந்து வரும், வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்ரிக்காவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கும் ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
எகிப்துக்கும், எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணுவதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மக்களுக்கு நன்றாக தெரியும். எனக்கு அவ்வளவு தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகை பிரியங்கா மோகன் சேலையில் அழகிய போட்டோஷூட். ரசிகர்களை கவரும் கியூட் ஸ்டில்கள் இதோ. https://www.instagram.com/p/DLH1wqEJLbS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து…
இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில்…
வடக்கு ஈரானில் செவ்வாய்க்கிழமை இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்னான்…
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…