Categories: Local

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவேண்டும் – வஜிர அபேவர்தன

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் 77 வருடங்களாக நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா முதல் 100 ரூபா வரை இருந்தது.

அதனால் மக்களுக்கு வாழ்வது மிகவும் கஷ்டமான நிலை என தெரிவித்து ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் சம்பளத்தை 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

தேங்காய் விலை 80, 100 ரூபாவாக இருக்கும்போதே ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் தற்போது தேங்காய் ஒன்றின் விலைக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை 50ஆயிரம் ரூபா வரை அதிகரித்திருக்க வேண்டும்.

அரச துறை மாத்திரமல்லாது ஒட்டுமொத்த இலங்கையின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சம்பள அதிகரிப்பில் அரச துறையில் மத்திய நிலையில் இருப்பவர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டிருக்கிறது.

டந்த காலங்களில் 2இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் கைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்தது. ஆனால் தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்ய 6,7 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. தவணை அடிப்படையில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் அன்று, எடுக்கும் சம்பளத்தில் 12ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது 40 ஆயிரம் ரூபா வரை செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

அதனால் இதன் பெறுபேறு எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது கிடைக்கும். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான நிலைக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும் என்பதை எனது அரசியல் வாழ்க்கை அனுபவத்தில் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டார்.

7 News Pulse

Recent Posts

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…

1 day ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…

1 day ago

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…

1 day ago

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…

1 day ago

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…

1 day ago

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…

1 day ago