இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதன் தலைவராக செயற்படுவதோடு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு குழுவின் அழைப்பாளராக செயற்படுவார்.
ஏனைய உறுப்பினர்களாக,
வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப்,
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன,
ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே,
ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன்,
எட்கன் ஸ்பென்ஸ் உப தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க,
பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்ரஃப் ஒமர்,
LOLC நிறைவேற்றுத் தலைவர் இஷார நாணயக்கார ஆகியோர் செயல்படுவார்கள்.
நிதியத்தை செயற்திறனாக நிர்வகிக்கும் அதிகாரம், முகாமைத்துவக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பொறுப்புகளில் தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை நிறுவுதல், நிதியை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியை விடுவித்தல் ஆகியவை அடங்கும்.
நிதியம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகம், கணக்காய்வு மற்றும் அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை இந்தக் குழு உறுதி செய்யும்.
அதன்படி, நன்கொடையாளர்கள் தமது நிதி உதவிகளை உள்நாட்டு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும், இலங்கை ரூபாவிலோ அல்லது வேறு எந்த நாணய அலகிலோ பின்வரும் இலங்கை வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்ய முடியும்.
மேலும், இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் நேரடியாக நிதியை வைப்புச் செய்யும் நன்கொடையாளர்கள், பின்வரும் கணக்குகள் மூலம் நிதியை வைப்புச் செய்ய முடியும்.
வெளிநாட்டு நாணய அலகுகளுக்கான கணக்கு விபரங்கள்:
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…