Categories: WORLD

அறிவியல் + அரசியல் – பூமிக்கு திரும்பும் சுனிதா மற்றும் வில்மோர்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 5ம் திகதி BOEING “starliner” விண்வெளிக்கு ஏவப்பட்டது. அடுத்த தினமான 6ம் திகதி “STARLINER” விண்வெளி நிலையத்தோடு தொடர்புபட்டது, 2024 ஜூன் 18ம் திகதி “STARLINER” பூமிக்கி திரும்பியிருக்கவேண்டும் ஆனால் “NASA ” ஆகஸ்ட் மாதம் வரை அந்த பயணத்தை தாமதப்படுத்தியது,

பின் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, “STARLINER” மற்றும் “SPACEX” ஆகிய இரண்டு விண்கலங்களில் எதாவது ஒன்றின் மூலமாக விண்வெளி வீரர்களை பூமிக்கு கொண்டுவர முயற்சிப்பதாக நாசா அறிவித்திருந்தது.

அந்தவகையில் நாசா 24.08.2024 அன்று விண்வெளி வீரர்களை “SPACEX” மூலமே பூமிக்கு கொண்டவரப்போவதாக அறிவித்தார்கள். அதன் பின் நீண்ட இடைவேளை…காரணம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர்தேர்வுத் தேர்தலும்(2024.11.05), பெரும்பான்மை ஆதரவோடு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதும். பல சட்டங்களில் உடலை மாற்றங்களை டிரம்ப் கொண்டுவந்ததும். இவை நிலைக்கு வந்தபின் 2025.02.11ம் திகதி “நாசா” அறிவித்தத்து “SPECEX”ன் DRAGON CAPSULE மூலமாக சுனிதா மற்றும் குழுவினர் பூமியை அடைவார்கள் என்று.

அதன்படி நேற்று (மார்ச் 15) நாசாவின் ஆன் மெக்லைன் மற்றும் நிக்கோல் அயர்ஸ், ஜப்பானின் டகுயா ஒனிஷி, ரஷ்யாவின் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் “SPECEX”ன் DRAGON CAPSULE மூலமாக விண்வெளிக்கு பயணப்பட்டு இன்று(மார்ச் 16) விண்வெளி நிலையத்தோடு இணைந்து கொண்டனர். இவர்களிடம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் அங்கே பார்த்துக்கொண்டிருக்கும் திட்டத்தை முறையாக கையளித்துவிட்டு அடுத்த வாரம் பூமிக்கு வந்து சேர்வார்கள்.

இந்த நிகழ்வு அறிவியல் + அரசியல் பின்னணியில் வர்த்தக வணிக போராட்டத்தை ஏற்படுத்த முனைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

சுனிதா மற்றும் வில்மோர் பூமிக்குத்திரும்புவது கட்டாயமானது, இதில் போயிங் விண்கலத்தில் இருந்து SPECEX விண்கலம் மாற்றப்பட்டதன் பின்னணி இயந்திரக்கோளாறு என்று கூறினாலும் இதன் பின்னணியில் பெரும் அரசியல் பிணைவு இருப்பதாகவே புத்திஜீவிகள் கூறுகின்றனர்.

இந்த மாற்றத்தால் SPECEX இந்த வளர்ச்சியும், போயிங்-இன் வீழ்ச்சியும் பாரிய மாற்றத்தை உலகளாவிய ரீதியில் கொண்டுவரப்போகின்றன.

கொரோனா காலத்தில் போயிங் நிறுவனம் ஆட்குறைப்பு செய்ததுமுதல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அவர்கள் மேற்கொண்ட உற்பத்தியில் தரப்பிரச்சனை அடுத்தடுத்து பதிவாகியது.

இந்த வாய்ப்பை மிக இலாபகமாக எலன் பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.

இதுதொடர்பாக எலன் கூறுகையில் சுனிதா மற்றும் வில்மோர் முன்னதாகவே பூமிக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி அதற்க்கான அனுமதியினை தரவில்லை என்றார்.

எது எப்படியோ 9 மாதங்கள் கழித்து பல எதிர்வுகூறல்களை தாண்டி, சில கற்பனைகளை தவிடுபொடியாக்கி சுனிதா மற்றும் வில்மோர் குழுவினர் இன்னும் சில நாட்களில் பூமியை வந்தடைந்து விடுவார்கள் என்பது நிச்சயம்

– HAMSI MARLON –

7 News Pulse

Recent Posts

பேபிசெரமி அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது Generative AI ‘Baby Cheramy Diaper Helpdesk’ 24/7 நம்பிக்கைக்குரிய குழந்தை வளர்ப்பு பங்காளி

இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…

2 days ago

Autodesk Strengthens Commitment to Driving Innovation and Sustainability in Sri Lanka’s Construction Sector

Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…

2 days ago

Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…

4 days ago

Nyne Hotels Immerses Travel Agents in Boutique Luxury Experience

Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…

4 days ago

Sri Lanka welcomes ‘Hello, to More’ as GWM and David Pieris Automobiles announce strategic partnership

Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…

4 days ago