இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிரேஸ் டேவிட்சன் என்ற 36 வயதான பெண் பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்துள்ளார்.
கிரேஸ் 2023 ஆம் ஆண்டில் தனது சகோதரியான ஏமியின் அறுவை சிகிச்சை ஊடாக கருப்பையைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் இது இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சையாக அமைந்தது.
அந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கிரேஸ் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தனது கருப்பையை தானம் செய்த கிரேஸின் சகோதரியின் பெயரான ஆமி என கிரேஸ் குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்.
குழந்தையின் இரண்டாவது பெயராக இஸபெல் எனக் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை குழுவின் தலைவராகச் செயற்பட்ட வைத்தியரின் பெயரை வைத்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்காக 30, 000 பவுண்ட் தொகை செலவாகியுள்ளதுடன் 30ற்கும் அதிகமான வைத்தியர்கள் குழு 17 மணித்தியாலங்கள் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
ஈரானில் வசித்து வரும் இலங்கையர்களுக்காக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டுள்ளது. ஈரானிலிருந்து…
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை மாதம் 1ஆம் திகதி…
The Public Relations Association of Sri Lanka (PRASL), the country’s leading representative body for the…
ශ්රී ලංකාවේ ප්රමුඛතම දේපළ වෙළඳාම් සමූහ ව්යාපාරය වන ප්රයිම් සමූහය (Prime Group) ශ්රී ලංකා පළාත්…
Sriyani Dress Point, one of Sri Lanka’s premier retail giants in ready-made garments, proudly hosted…
Colombo, Sri Lanka, Friday 5 June 2025 – In a defining moment for the brand,…