இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிரேஸ் டேவிட்சன் என்ற 36 வயதான பெண் பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்துள்ளார்.
கிரேஸ் 2023 ஆம் ஆண்டில் தனது சகோதரியான ஏமியின் அறுவை சிகிச்சை ஊடாக கருப்பையைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் இது இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சையாக அமைந்தது.
அந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கிரேஸ் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தனது கருப்பையை தானம் செய்த கிரேஸின் சகோதரியின் பெயரான ஆமி என கிரேஸ் குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்.
குழந்தையின் இரண்டாவது பெயராக இஸபெல் எனக் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை குழுவின் தலைவராகச் செயற்பட்ட வைத்தியரின் பெயரை வைத்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்காக 30, 000 பவுண்ட் தொகை செலவாகியுள்ளதுடன் 30ற்கும் அதிகமான வைத்தியர்கள் குழு 17 மணித்தியாலங்கள் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக்…
மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில்…
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. நாளைய தினமும் எதிர்வரும் 28ஆம்…
காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை…
உந்துருளியில் பயணிக்காத ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் சோதனை செய்யுமாறு…
சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று (24) முதல் மறு அறிவிப்பு…