இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட சர்ச்சைகளையடுத்து, பதாகையின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட வடிவமைப்பை தனது Facebook கணக்கிலும் பகிர்ந்துள்ளார்.
இந்த மாற்றம், டிஜிட்டல் வடிவமைப்பில் மாத்திரமா அல்லது கொழும்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளிலும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இதற்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 07.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த நிலையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதிலும் தற்போது மக்களுக்கு விசனம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு என்பது முக்கியமான ஒரு விடயம் தான். அனால் விதிகளை மூடி மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்குவது எவ்வகையில் ஞாயமாகும் என பொதுமக்கள் தங்கள் விசனத்தை தெரிவிக்கின்றனர்.
தனது பாதுகாப்பு காவலர்களை குறைத்தமை, மேலதிக பாதுகாப்பு வண்டிகளை வேண்டாம் என்றமை, தனது கார் கதவினை தானே திறந்தமை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் பிறநாட்டு அரசியல்வாதிகளுக்காக விதிகளை மூடுவது, மாற்று விதிகளை பயன்படுத்த கோருவது வேடிக்கையாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவுகளை இட்டு விமர்சிக்கின்றார்கள்.
ஆனால் பிறிதோர் நாட்டில் இருந்து முக்கிய அரசியல் புள்ளிகள் வேறொரு நாட்டிற்கு உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்போது. அந்த அரசியல் புள்ளியின் பாதுகாப்பு வீரர்கள் முன்னதாகவே அவர் வியாஜம் மேற்கொள்ளும் நாட்டிற்கு சென்று பாதுகாப்புகளை உறுதிப்படுத்தி, சில கோரிக்கைகளை அந்நாட்டு அரசாங்கத்திடம் முன்வைப்பார்கள். அவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக இவை இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…