உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில் ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதோடு முப்பதிற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை உறுதி செய்து தெரிவித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலில் எட்டு 5 மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாக கட்டிடமும் 30 கார்களும் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளபக்கத்தில் “எங்களைப் போலவே அமைதியை விரும்பும் கூட்டாளிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம், அடுத்த வாரம் ஐரோப்பா, அமெரிக்கா, சவுதி அரேபியாவில் நிறைய வேலைகள் இருக்கும். அமைதியை விரிவுபடுத்துவும் பாதுகாப்புக்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்று ட்ரம்ப் குழுவினருடன் பல்வேறு மட்டங்களில் தீவிரமான பணிகளில் ஈடுப்பட்டோம். நோக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது, விரைவில் அமைதி மற்றும் நம்பகமான பாதுகாப்பே அது. ஒரு ஆக்கபூர்மான அணுகுமுறைக்கு உக்ரைன் உறுதிபூண்டுள்ளது. உதவி செய்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை…
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.…
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…
ஊழியர் நலன்களுக்கான நிதியை முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12)…
இன்று (13) மாசிமக பூரணை தினமாகும் புத்தபெருமான் முதன்முதலில் தனது சொந்த ஊரான கிம்புல்வத் புராவிற்கு விஜயம் செய்த நாள்…