Categories: WORLD

இஸ்ரேலில் பரவும் காட்டுத்தீ – அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.

காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.

புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.

லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

Doneproduction

Recent Posts

Virtusa Awarded EcoVadis Gold Medal for Business Sustainability, Ranks in 98th Percentile Globally

The recognition reflects excellence across Environment, Labor & Human Rights, Ethics, and Sustainable Procurement Virtusa…

1 day ago

சஜித் அணியினருக்கு பதிலடி – கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவில் எந்தச் சதியும் நடக்கவில்லை. தோல்வியடைந்த சஜித் அணியினர் பொய்களைக் கூறிப் புலம்புவதை நிறுத்த…

2 days ago

An Innovative Rotary Program to Promote Values in Children

Season 4 Honda Purudu Championship Finals were held at the Temple Trees Auditorium on the…

2 days ago

DIMO Healthcare, ශ්‍රී ලංකාවේ ප්‍රථම Echosens FibroScan® Expert 630 යන්ත්‍රය වත්තල Hemas Hospotal වෙත හඳුන්වා දෙයි

ශ්‍රී ලංකාවේ සෞඛ්‍යය සේවා අංශයේ ප්‍රමුඛයෙකු වන DIMO Healthcare, අක්මාව ආශ්‍රිත රෝග හඳුනා ගැනීම පිළිබඳව…

2 days ago

CITY HOTELS CELEBRATES FATHERS’ DAY ON SUNDAY

'Father’s Day, was celebrated yesterday around the world as well in Sri Lanka to recognise…

4 days ago

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் "ஜகத் விக்ரமரத்ன"…

4 days ago