உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபலமான பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் கணித பாட ஆண் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன.
இது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
'Father’s Day, was celebrated yesterday around the world as well in Sri Lanka to recognise…
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் "ஜகத் விக்ரமரத்ன"…
இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும்…
ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன…
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை அண்மைக்காலத்தில் முடக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களுள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய…
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்…