உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது.
இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்து, மேற்படி பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து, இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களிடம் இருந்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட வழக்கு பொருட்களை அவர்களுக்கு விடுவிக்க உத்தரவிடுமாறு கோரினார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட பொருட்களை சந்தேக நபர்களுக்கு விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க…
දේශය පෝෂණය කරමින්, මිහිතලය පොහොසත් කරමු තිරසර පරිසරයක් නිර්මාණය කරන්නට දිගු කාලයක් පුරා ලබා…
வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சந்தை மாற்றத்தின் இருபது ஆண்டுகள் கூட்டாண்மையை கொண்டாடுகிறது கொழும்பு, ஜூன் 20, 2025 – AMARON…
The Heladiv Tea Club (HTC), nestled in the iconic Dutch Hospital precinct in the heart…
இலங்கையில் Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக செயற்படும் Delmege Energy, இரு பிரபலமான வர்த்தகநாம தூதுவர்கள நியமித்து,…
Link Natural Products (Pvt) Ltd., the foremost manufacturer of herbal healthcare and personal care products…