Categories: Local

உயிர் மாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில்  ஆண்களுக்கு மத்தியில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதன்படி, 100,000 ஆண்களில்  27 உயிரிழப்புகளும், 100,000 பெண்களில் ஐந்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. 

நாட்டில் மொத்த உயிர்மாய்ப்புகளின்  விகிதம் 100,000 க்கு 15 ஆக பதிவாகியுள்ளன.  இது உலகளவில் சராசரியாக 10.5 ஐ விட மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022ம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின் படி உயிர்மாய்ப்பு விகிதம் வயதுக்கு ஏற்ப அதிகரித்துள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே 100,000 க்கு 65 ஆக உயர்ந்துள்ளன. பெண்களில், 17-25 வயதுக்குட்பட்டவர்களில் 100,000 க்கு 10 ஆக உயர்ந்துள்ளன. 

மேலும் 15–29 வயதுடையவர்களிடையே நிகழும் உயிரிழப்புகள் பெரும்பாலும் உயிர்மாய்ப்புகளாகவே காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது

2019 ஆம் ஆண்டில் 703,000 பேர் உயிர்மாய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த உயிர்மாய்ப்பு விகிதங்களில்  77 சதவீதமானோர் குறைந்த வருமானம் பகுதிகளில் வசிப்பவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

gurueaswar

Recent Posts

First Capital designates February as Month of Sustainability & Wellbeing

First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and a pioneering force in…

6 hours ago

Singer (Sri Lanka) PLC Wins Gold at TAGS Awards 2025

Singer Sri Lanka PLC was awarded the Gold Award in the Trading Companies category at…

7 hours ago

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

22 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

23 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

24 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

24 hours ago