JAAF
இலங்கையின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்காக, ஒருங்கிணைந்த மீட்புப் பணியை ஆடைத் தொழில்துறை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) அறிவித்துள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் பல மாவட்டங்களில் போக்குவரத்துத் தடை குறித்த செய்தி அறிக்கைகள் வந்ததையடுத்து, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து இந்தத் துறையின் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்கும் என்று JAAF உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களை அடையாளம் காணவும், உடனடித் தேவைகளை மதிப்பிடவும், உரிய நேரத்தில் உதவிகளை உறுதிப்படுத்தவும் JAAF அனைத்து உறுப்பினர் அமைப்புகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகள் சாதாரணமாக இயங்கத் தொடங்கியுள்ளன; ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே அணுகல் மற்றும் பிற உட்கட்டமைப்பு தொடர்பான சவால்களை இன்னும் எதிர்கொள்கின்றன. நாடளாவிய ரீதியில், நிறுவனங்கள் ஏற்கனவே இடப்பெயர்வுக்கு உள்ளான தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு உணவு, உடை, தற்காலிகத் தங்குமிடம், போக்குவரத்து உதவி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கி வருகின்றன.
நிவாரணப் பணிகளை நெறிப்படுத்த, பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பற்றி அறிவிக்கவும், மாவட்ட அளவிலான பாதிப்புப் புதுப்பிப்புகளைப் பகிரவும், உறுப்பினர் நிறுவனங்களுக்காக JAAF மத்திய நிலையங்களை நிறுவியுள்ளது. இந்தச் செயல்முறையானது வளங்களை விரைவாகத் திரட்ட உதவுகிறது, மேலும் எந்தவொரு ஊழியரோ அல்லது குடும்பமோ கவனிக்கப்படாமல் இருப்பதைத் தவிர்க்கவும் உறுதி செய்கிறது.
அணுகல் இன்னமும் கடினமாக உள்ள பகுதிகளில், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பற்றிய உடனடித் தகவல்களை வழங்குவதன் மூலமும், தேசிய நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் JAAF அரசாங்க அதிகாரிகளுடன் தீவிர தொடர்பில் உள்ளது.
அந்தச் சங்கம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “எங்கள் தொழில்துறையின் மீள்தன்மை எங்கள் மக்களிடமிருந்து வருகிறது. இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் துணை நிற்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், மேலும் உடனடி மீட்பு மற்றும் நீண்ட கால ஒத்துழைப்பை உறுதிப்படுத்த எங்கள் உறுப்பினர்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.”
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
View Comments
Hey folks! Just tried out 321gobetlogin, easy peasy login process, just like I like it! Quick and painless. Makes getting into the games a breeze. Check it out for yourself! 321gobetlogin
**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.