கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 10 வான்கதவுகளும் நேற்று (ஏப்ரல் 28) இரவு திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி நான்கு வான் கதவுகள் ஓடு அடிக்கும், ஆறு வான் கதவுகள் அரை அடிக்கும் திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 114,000 கன அடியாக இருக்க நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்து கந்தளாய் குளம் நிரம்பியதை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது வினாடிக்கு 1400 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாக கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னியனார்மடு, புளியடிக்குடா முத்தான பிரதேசங்களில் வயல் நிலங்களில் நீர் புகுந்து பயிர்ச்செய்கை நீரில் மூழ்கியுள்ளது.
இப்பிரதேசங்களில் சுமார் 2000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பெரும்போக வேளாண்மை செய்யப்படுவதால் தற்போழுது அவற்றில் நீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவணம் செலுத்தவேண்டும்.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…