கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று(வெப்ரவரி 21) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிசார், கைதுசெய்யப்பட்ட இரு துப்பாக்கிதாரிகளையும் அழைத்துச் சென்றபோது பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கீழ்க்கண்டவாறு கூறினார்,
“21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்குள் சசிக்குமார் என்ற 38 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டது. சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும்போது பொலிஸாரால் துரத்திச் சென்று
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பறிமுதல் செய்ததோடு கொலையாளிகளையும் பிடித்தனர்.
21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த ஏனைய ஆயுதங்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த பகுதிக்கு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு, சந்தேகநபர்கள் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது பொலிஸ் அதிகாரிகள் நடத்திய தற்காப்பு துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்..
இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.”
Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its…
Shop, Win, and Create Memories That Last – Including an iPhone 17 Pro Giveaway! 26…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும்…
களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடை நிரம்பி வழிகிறது என்று கொழும்பு மாவட்டச்…
இலங்கையின் பிரபல கானா பாடகர் "நவகம்புர கணேஷ்" உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார். தன்னுடைய உத்வேகமான குரலாலும்,…
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். டிட்வா…