Categories: Local

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிப்பு

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் காவல்துறையினருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பிஸ்டோல் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் காவல்துறையினருக்கு 4 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைதானால் காவல்துறையினருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Doneproduction

Recent Posts

இன்று உலக சிறுநீரக தினம்

இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…

7 hours ago

EPF வழங்காத அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பு

ஊழியர் நலன்களுக்கான நிதியை முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

7 hours ago

மித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12)…

7 hours ago

இன்று மாசிமக பூரணை தினம்

இன்று (13) மாசிமக பூரணை தினமாகும் புத்தபெருமான் முதன்முதலில் தனது சொந்த ஊரான கிம்புல்வத் புராவிற்கு விஜயம் செய்த நாள்…

7 hours ago

நாட்டின் சில பகுதிகளில் கனமழை

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று (13) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

7 hours ago

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் யார்?

நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்கண்டி மேல்நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற…

19 hours ago