டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துவதுடன், குறித்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட மற்றும் குறுகிய காலத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 18,749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், மழையுடனான வானிலையினால் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயம் மிக்க மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் சிக்குன்குனியா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நுளம்பு பெருகும் இடங்களைக் கண்டறிந்து அதனை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்பு கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உடல் முழுவதையும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது
வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு…
வடக்கு மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்களை தங்கள் வளாகத்திற்குத் திருப்பி அனுப்பிய பேருந்து ஒரு மினிவேன் மீது மோதியதில் 15 பேர்…
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற 12 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற ஒரு படகு இஸ்ரேலியப் படைகளால் கைப்பற்றப்பட்ட…
2025 பொசோன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக…
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருந்த அக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் அக்சியம்-4 மனித விண்வெளிப்…
கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார்…