சிலாபம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றில் சுமார் 247 கிலோ எடை கொண்ட கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாபம் பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (வெப்ரவரி 25) இரவு சிலாபம் பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மெரவல பாலத்துக்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது காரின் பின் பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 114 கஞ்சா பொதிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 247 கிலோ 946 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கைதான சந்தேகநபர் 36 வயதுடைய திம்பில்லே பகுதியை சேர்ந்தவர் ஆவார். குறித்த நபர் கஞ்சா பொதிகளை மெரவல பகுதியில் இருந்து முன்னேஸ்வரம் நோக்கி கொண்டு செல்லும் போதே இவ்வாறு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் சிலாபம் பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி…
பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில்…
HNB Finance PLC தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளரின் நிதி பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், உலகில் எங்கிருந்தும்…
The Amateur Rowing Association of Sri Lanka (ARASL) is thrilled to announce the highly anticipated…
Janashakthi Life, a subsidiary of JXG (Janashakthi Group), proudly marks a significant milestone as it…
The 4th instalment of PodHub and AIA Insurance’s compelling four-part ‘Rethink Healthy’ podcast series featured…