Categories: LocalPolitics

டேன் பிரியசாத் கொலைக்கும் சகோதரரின் கொலைக்கும் தொடர்பா?

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர். 

இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கையை ஏற்று, இருவரும் நாட்டைவிட்டு வெளியே செல்வதைத் தடுக்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல உத்தரவிட்டார். 

மேலும், சுட்டுக்கொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத்தின் சகோதரரான திலின பிரியசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் இன்னும் நீதிமன்றத்தில் குறித்த தந்தை மகனுக்கு எதிராக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதுவரை 10 பேரிடம் சாட்சியம் பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நீதவான் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Punitha Priya

Recent Posts

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…

6 hours ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…

6 hours ago

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…

6 hours ago

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…

6 hours ago

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…

6 hours ago

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…

6 hours ago