சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, இருவரும் நாட்டைவிட்டு வெளியே செல்வதைத் தடுக்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல உத்தரவிட்டார்.
மேலும், சுட்டுக்கொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத்தின் சகோதரரான திலின பிரியசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் இன்னும் நீதிமன்றத்தில் குறித்த தந்தை மகனுக்கு எதிராக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை 10 பேரிடம் சாட்சியம் பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நீதவான் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி…
பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில்…
HNB Finance PLC தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளரின் நிதி பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், உலகில் எங்கிருந்தும்…
The Amateur Rowing Association of Sri Lanka (ARASL) is thrilled to announce the highly anticipated…
Janashakthi Life, a subsidiary of JXG (Janashakthi Group), proudly marks a significant milestone as it…
The 4th instalment of PodHub and AIA Insurance’s compelling four-part ‘Rethink Healthy’ podcast series featured…