மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவத்துக்காக இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, ரீ-56 ரக துப்பாக்கியும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பவ இடத்திலிருந்து குறித்த கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தன.
இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு மாத்தறை பதில் நீதவான் நேற்று பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மாத்தறை – தேவேந்திரமுனை விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த மோதலின் விளைவாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a…
Dialog Enterprise, the corporate solutions arm of Dialog Axiata PLC, has partnered with HNB Investment…
இலங்கையில் ஹாவெஸ்டர் ஒன்றில் உள்ள ரப்பர் ட்ரக்குகளுக்கு வழங்கப்படும் முதன்முறையானதும் ஒரேயொரு உத்தியோகபூர்வமானதுமான உத்தரவாதத்தை DIMO Agribusinesses நிறுவனம் தனது…
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை…
Accelerating Sri Lanka’s digital future, Disrupt Asia 2025, South Asia’s premier startup conference and innovation…
Alumex வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நம்பகத்தன்மை, வேகமான விநியோகம் Hayleys Group நிறுவனத்தின் உறுப்பினரான, நாட்டின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளராக திகழும்…