Categories: Local

நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீள ஆரம்பம்

நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. இதில் 112 பேர் பயணம் செய்தார்கள்.

நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு 2023 அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் திகதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் திகதி முதல் பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது.

இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்து இடம்பெற்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 24ம் திகதி முதல் கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 8 நாட்களுக்கு பிறகு இன்று முதல் வழக்கம்போல நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டு சென்றது.

Doneproduction

Recent Posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண முடியாத நிலையில் இலங்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம்…

11 hours ago

இலங்கையில் கிறீம் – லோஷன்கள் வாங்குபவர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையில் கிறீம்களில் கன உலோகங்களின் அளவு அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சந்தையில் இருந்து…

11 hours ago

கொலராடோ தாக்குதலுக்கு இஸ்ரேலின் ஐ.நா தூதர் கண்டனம்

ஹமாஸ் சிறையிலிருந்து பணயக்கைதிகளை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அழைப்பு விடுத்து அமைதியான பேரணியில் பங்கேற்றவர்கள் மீது மோலோடோவ் காக்டெய்ல்களை ஒருவர்…

11 hours ago

மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா

இதுவரை நடந்த மிகப்பெரிய போர்க் கைதிகள் பரிமாற்றத்துடன், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கிய பெருநகரத்தில்…

11 hours ago

பாரிஸ் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலவரம் – நூற்றுக் கணக்கானோர் காயம்

பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.…

11 hours ago

பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த வாகனம்

பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி…

11 hours ago