Categories: Local

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதில் சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பினும் அதனையும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி புத்தகப் பைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை 15 முதல் 20 கிலோகிராம் அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

அதன்படி, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 2 கிலோவாகவும், இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 3 கிலோவாகவும், ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாகவும் இருத்தல் வேண்டும்.

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 7 கிலோவாக இருத்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதற்காக இவ்வாறு புத்தக பையின் எடையை மட்டுப்படுத்திகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

இதுதொடர்பாக நாம் ஆராயும் போது ஆச்சரியமான முடிவுகள் எமக்கு கிடைத்தன.

இலங்கை பள்ளி மாணவர்களில் சுமார் 35% பேர் நாள்பட்ட தசை மற்றும் எலும்புக்கூடு வலியால் பாதிக்கப்படுகின்றார்களாம்.அதற்க்கு முக்கிய காரணமே இந்த பள்ளி பையின் பரம்தான் என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கடந்த வருடம் குடும்ப சுகாதார பணியகத்தின் குழந்தை நோய், இறப்பு பிரிவைச் சேர்ந்த ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் கபில ஜெயரத்ன உறுதிப்படுத்தினார்.

மாணவர்கள் தினமும் பள்ளிக்கு அதிக அளவு புத்தகங்களை எடுத்துச் செல்கிறார்கள் என்றும் தரமற்ற பள்ளிப் பைகளைப் பயன்படுத்துவதும் ஒருவகை காரணம் என்றும் வைத்தியர் ஜெயரத்ன கூறினார்.

“2011 ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகங்கள் உயர்தர பள்ளிப் பையின் முன்மாதிரியைக் கொண்டு வந்தன. இந்தப் பைகளில் இரண்டு பெட்டிகள் இருந்தன. பின்புறத்திற்கு மிக அருகில் உள்ள பெட்டியில் கனமான புத்தகங்கள் வைக்கப்பட்டன. தோள்பட்டை பாட்டிகள்கள் அகலமாகவும் மொத்தமாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சாதாரணமாக ஒரு குழந்தையின் உடல் எடையில் மொத்த பையின் எடை 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டுமாம். அனால் இவற்றை அநேகமானோர் சரியாக பின்பற்றாததால் மீண்டும் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. இருப்பினும் சில பாடசாலைகளில் அவை நடைமுறைப்படுத்தப்படத்தது அவர்களில் அசமந்தப்போக்கை எடுத்துக்காட்டுகின்றது, இதில் பெற்றோர்கள் சற்று கவனமாக செயற்படவேண்டும்.

7 News Pulse

Recent Posts

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…

2 days ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…

2 days ago

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…

2 days ago

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…

2 days ago

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…

2 days ago

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…

2 days ago