Categories: Local

புதிதாக உதயமான அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சட்டரீதியாகவும், திறமையை வளர்க்கும் பங்காற்றலோடும், சரீர உதவிகளை வழங்குவதற்கும், சமூக மற்றும் தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடும் இந்த புதிய அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று (வெப்ரவரி 16) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அய்யாவுக்கான அஞ்சலியை செலுத்தியதோடு, உண்மைக்கு குரல் கொடுத்து பல்வேறு காரணங்களால் மரணித்த ஊடகவியலாளர்களையும் நினைவுபடுத்தி அவர்களின் ஆத்ம சந்திக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பின்னர் பூர்வாங்க நிகழ்வான ஒன்றியத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

ஒன்றியத்தின் தலைவராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தெரிவு செய்யப்பட்டதோடு, செயலாளராக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவும் பொருளாளராக ஜூனியர் தமிழன் பத்திரிகையில் கடைமையாற்றும் திருமதி.வருணியும் தெரிவு செய்யப்பட்டனர்.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிர்வாகக்குழு.

மேலும் ஒன்றியத்தின் பிரதி தலைவர்களாக சுயாதீன ஊடகவியலாளர்களான தில்லையம்பலம் தரணீதரன் மற்றும் கலாவர்சினி கனகரட்ணம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி செயலாளர்களாக சுயாதீன ஊடகவியலாளரான மஹேஸ்வரி விஜயனந்தன் மற்றும் டான் செய்திப்பிரிவின் பொறுப்பதிகாரியான நிர்ஷன் இராமானுஜமும்,உதவிப் பொருளாளராக சுயாதீன ஊடகவியலாளர் பார்த்தீபனும், நிர்வாக செயலாளராக திரு.ஈஸ்வரலிங்கமும், துணை நிர்வாக செயலாளராக எழுத்தாளர் ரிம்ஸா முஹம்மத்தும் தெரிவு செய்யப்பட்டதோடு ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஒன்றியத்தின் செயற்பாடுகளை கண்காணித்து ஆலோசனைகளை வழங்க ஊடகத்துறையில் பலவருட அனுபவங்களை கொண்டுள்ள ஒரு உயர்பீடம் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பெரும்பாலான இளம் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டது தனிச்சிறப்பு.

இதன்போது பல்வேறு ஆரோக்கியமான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதோடு இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

7 News Pulse

Recent Posts

SLT-MOBITEL triumphs as Overall Runners-Up at 40th Annual Mercantile Athletics Championships 2025

Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its…

21 hours ago

Celebrate the Heartfelt Magic of Christmas with Seylan Cards

Shop, Win, and Create Memories That Last – Including an iPhone 17 Pro Giveaway! 26…

21 hours ago

மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி…!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும்…

21 hours ago

வேகமாக உயர்ந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம் – மக்களை அவசரமாக வெளியேற உத்தரவு!

களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடை நிரம்பி வழிகிறது என்று கொழும்பு மாவட்டச்…

21 hours ago

மக்களின் மனதை வென்ற கலைஞர் மறைந்தார்.

இலங்கையின் பிரபல கானா பாடகர் "நவகம்புர கணேஷ்" உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார். தன்னுடைய உத்வேகமான குரலாலும்,…

1 day ago

நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.  டிட்வா…

2 days ago