இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சட்டரீதியாகவும், திறமையை வளர்க்கும் பங்காற்றலோடும், சரீர உதவிகளை வழங்குவதற்கும், சமூக மற்றும் தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடும் இந்த புதிய அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று (வெப்ரவரி 16) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அய்யாவுக்கான அஞ்சலியை செலுத்தியதோடு, உண்மைக்கு குரல் கொடுத்து பல்வேறு காரணங்களால் மரணித்த ஊடகவியலாளர்களையும் நினைவுபடுத்தி அவர்களின் ஆத்ம சந்திக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் பூர்வாங்க நிகழ்வான ஒன்றியத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தெரிவு செய்யப்பட்டதோடு, செயலாளராக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவும் பொருளாளராக ஜூனியர் தமிழன் பத்திரிகையில் கடைமையாற்றும் திருமதி.வருணியும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் ஒன்றியத்தின் பிரதி தலைவர்களாக சுயாதீன ஊடகவியலாளர்களான தில்லையம்பலம் தரணீதரன் மற்றும் கலாவர்சினி கனகரட்ணம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி செயலாளர்களாக சுயாதீன ஊடகவியலாளரான மஹேஸ்வரி விஜயனந்தன் மற்றும் டான் செய்திப்பிரிவின் பொறுப்பதிகாரியான நிர்ஷன் இராமானுஜமும்,உதவிப் பொருளாளராக சுயாதீன ஊடகவியலாளர் பார்த்தீபனும், நிர்வாக செயலாளராக திரு.ஈஸ்வரலிங்கமும், துணை நிர்வாக செயலாளராக எழுத்தாளர் ரிம்ஸா முஹம்மத்தும் தெரிவு செய்யப்பட்டதோடு ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஒன்றியத்தின் செயற்பாடுகளை கண்காணித்து ஆலோசனைகளை வழங்க ஊடகத்துறையில் பலவருட அனுபவங்களை கொண்டுள்ள ஒரு உயர்பீடம் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பெரும்பாலான இளம் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டது தனிச்சிறப்பு.
இதன்போது பல்வேறு ஆரோக்கியமான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதோடு இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…