Categories: Business

மகளிர் தினத்தை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட மைக்ரோநிதி தொழில்முனைவோரை மேம்படுத்த HNB திட்டம்

2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, HNBஆல் நிதி அறிவுத்திறனை ஊக்குவித்தல் மற்றும் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று அண்மையில் நடத்தப்பட்டது. தொழில்முனைவு தலைவர்கள், நிதித் துறை நிபுணர்கள் மற்றும் HNB பிரதிநிதிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பெண் மைக்ரோ நிதி தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர். நிலையான வணிகங்களை உருவாக்குவதற்கும், அவர்களின் தொழில்முனைவு பயணத்தை வலுப்படுத்துவதற்கும் தேவையான கருவிகள் மற்றும் புரிதல்களை பெண்களுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

“மேம்பாடு மற்றும் நிதி அறிவுத்திறன்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உண்மையான விவாதங்கள், கல்வி அமர்வுகள் மற்றும் நிதி நிர்வகிப்பு மற்றும் தொழில்முனைவு குறித்த நிபுணர் குழு விவாதங்கள் ஆகியவை அடங்கும். இலங்கை முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் வருகை தந்த தொழில் துறை நிபுணர்களிடமிருந்து சவால்களை சமாளித்தல் மற்றும் அவர்களின் வணிகங்களை விரிவுபடுத்துதல் குறித்த அறிவைப் பெற்றனர்.

HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, அனைவரின் பங்களிப்புடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், பெண்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வங்கியின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

“இன்று நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் உள்நாட்டு சமூகங்களில் பெரும்பாலானவர்கள் பெண் தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். பெண்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அறிந்து, HNB அவர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்குவதற்கான படிகளை எடுத்துள்ளது. நிதி அறிவுத்திறன், பெண்களை மேம்படுத்தும் திட்டங்கள், முன்மாதிரிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வலுவான வலைப்பின்னல்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் பெண்கள் வளர்ச்சியடைவதற்கும் வெற்றிபெறுவதற்கும் உதவுவதே எங்கள் நோக்கம்,” என்று தமித் பல்லேவத்த கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பெண் தொழில்முனைவோர் சிறந்த நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு உதவுவதற்காக நிபுணர்களால் நடத்தப்பட்ட அமர்வுகள் அடங்கும். இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பிரதிப் பணிப்பாளர் கீர்த்தி துணுதிலக், HNB இன் வைப்பு தலைமை அதிகாரி விரங்க கமகே, வரி மற்றும் குழு கணக்கியல் துறை சிரேஷ்ட முகாமையாளர் ராமன் ஜெயகுமார், களனி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் ஹஷி பீரிஸ், தொழில்முனைவோர் ஷாமலி விக்கிரமசிங்க மற்றும் HNB அஷ்யூரன்ஸின் தலைமை வணிக அதிகாரி சனேஷ் பிரானந்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வுகளில், பெண்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு நீண்டகால வெற்றிக்குத் தேவையான கருவிகள் மற்றும் நிபுணத்துவ அறிவுடன் ஆதரவளிப்பதற்கான HNB இன் அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சம், பெண் தொழில்முனைவோர் மற்றும் HNB இன் தலைமை குழுவுடன் நிதி சவால்களை சமாளிப்பதற்கான உத்திகளை ஆராய்வது, நிதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அவர்களின் வணிகங்களை விரிவுபடுத்துவதற்காக வங்கி தீர்வுகளை அதிகபட்சமாக பயன்படுத்துவது குறித்த நிபுணர் குழு விவாதம் ஆகும். பெண்களால் நடத்தப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பொருத்தமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான HNB இன் தொடர்ச்சியான முயற்சிகள் இங்கு விவாதிக்கப்பட்டன, மேலும் அவர்கள் சரியான நிதி கருவிகள் மற்றும் நிபுண ஆலோசனையைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் பெற்றனர்.

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கான நீண்ட வரலாற்றைக் கொண்ட HNB, மாறிவரும் பொருளாதாரத்தில் வெற்றிபெற தேவையான கருவிகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வணிகத் துறையில் பெண்களை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

7 News Pulse

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

4 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

5 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

6 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

6 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

6 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago