Categories: LocalPoliticsWORLD

மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.

அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மார் தூதுவர் நன்றி தெரிவித்தார்.

அதேபோல் நெருக்கடியான நேரத்தில் நிவாரணக் குழு மற்றும் சுகாதார பணிக்குழுவை அனுப்பி வைத்தமைக்காகவும் நன்றி தெரிவித்த தூதுவர், இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நீண்டகால மத மற்றும் கலாச்சார நட்புறவு இதன் காரணமாக மேலும் வலுவடையும் என்றும் கூறினார்.

நிலநடுக்கத்தின் பின்னர் மியன்மாரின் தற்போதைய நிலைமை குறித்தும் ஜனாதிபதியின் செயலாளருக்கு தூதுவர் விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ் மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மியன்மார் தூதரக அதிகாரிகளான Winh Wint Khaus Tun, Lei Yi Win உள்ளிட்டோரும் இதன்போது கலந்து கொண்டனர்.

Punitha Priya

Recent Posts

Five Sri Lankan startups take flight with Uber Springboard

COLOMBO, July 31, 2025: Uber, the global ride-hailing and delivery platform, today concluded the second…

5 minutes ago

SLT-MOBITEL launches enhanced ‘Home 4G LTE Broadband’ offering more value for every Sri Lankan home

SLT-MOBITEL has unveiled a revamped Home 4G LTE Broadband portfolio offering more value and simplified…

10 minutes ago

Nyne Hotels Redefines Luxury Through Sustainable Hospitality Practices

At a time when environmental responsibility is no longer optional but imperative, Nyne Hotels takes…

8 hours ago

Sinopec Introduces its Clean Sri Lanka Action to North Central Province

15th Renovated Station in Sri Lanka Advances “Cleaner Energy, Better Life” Vision and Aligns with…

8 hours ago

BUDDHIST CLERGY, ANIMAL WELFARE ACTIVISTS, AND CORPORATES URGE GOVERNMENT TO SAFEGUARD ANIMALS AND NATURE THROUGH SCIENTIFIC, HUMANE POLICIES

Colombo, Sri Lanka — 23 July 2025 A landmark gathering took place in Colombo this…

9 hours ago

டேவிட் பீரிஸ் குழுமம் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்குகிறது.

டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி…

1 week ago