பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தனக்கு தானே தீங்கு விளைவித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இவர், வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, நேற்று (22) பிற்பகல், தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Eduzone Consultants (Pvt) Ltd proudly celebrates its 15th anniversary in 2024, marking a remarkable journey…
Durdans Hospital has officially unveiled Revive by Durdans, Sri Lanka’s first premium multidisciplinary wellness and…
வட பிராந்தியத்தில் உள்ள வணிக பிரமுகர்கள் மத்தியில் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்ளும்…
1970ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனமான Sri Lanka Institute of Marketing (SLIM), நாட்டின் உத்தியோகபூர்வ சந்தைப்படுத்தல்…
Colombo, Sri Lanka, 13 June, 2025: ASUS, a global leader in cutting edge technology and…
In a breakthrough for sustainable water management, the Sri Lanka Institute of Information Technology (SLIIT),…