தெட்சண கைலாயம் எனப்படுவதும் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரர் வீற்றிருக்கும் திருகோணமலையில் எழுந்தருளி அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி , சக்தி பீடங்களில் முதன்மையானதும் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சித்திரை மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45க்கு தம்ப பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் 10.00 மணிக்கு திருவிழா இடம்பெற்று பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம், 3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை, மாலை 4.15 மணிக்கு தம்பபூஜை, மாலை 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 6.00 மணிக்கு திருவிழா இடம்பெற்று 7.30 மணிக்கு நிறைவு பெறும்.
01.04.2025 – முதலாம் திருவிழா – காராம்பசு வாகனம்
02.04.2025 – இரண்டாம் திருவிழா – மகர வாகனம்
03.04.2025 – மூன்றாம் திருவிழா – சர்ப்ப வாகனம்
04.04.2025 – நான்காம் திருவிழா – அன்ன வாகனம்
05.04.2025 – ஐந்தாம் திருவிழா – மஞ்சம்
06.04.2025 – ஆறாம் திருவிழா – கைலாக வாகனம்
07.04.2025 – ஏழாம் திருவிழா – சிம்ம வாகனம்
08.04.2025 – எட்டாம் திருவிழா – குதிரை வாகனம்
09.04.2025 – ஒன்பதாம் திருவிழா – சப்பறத்திருவிழா
10.04.2025 – தேர் திருவிழா
11.04.2025 – தீர்த்தோற்ஸவம்
12.04.2025 – பூங்காவனம் இடம்பெற திருவுளம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…