2026 පෙබරවාරි/මාර්තු, කොළඹදී: ශ්රී ලංකාවේ උපත ලද ආ කැපේලා කලාකරු hachajah, ඇමරිකා එක්සත් ජනපදයේ ලොස් ඇන්ජලීස් නගරයේ පැවති ආ කැපේලා වීඩියෝ සම්මාන උළෙලේදී (AVAs), සිය Mind Gag ආ කැපේලා සංගීත වීඩියෝව සඳහා සම්මාන දෙකකින් පිදුම් ලැබුවේය. Best Electronic/Experimental Video සහ Best Indie Video යන කාණ්ඩ දෙක යටතේ ඔහුට එම සම්මාන ද්විත්වය හිමි විය. නූතන ආ…
மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு விநியோகம் – புதிய அறிவிப்பு
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை, (30.05.2025) முடிவடையும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம் 2.6. 2025 முதல், ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள், காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
முன்பதிவு செய்தல் அல்லது அவசரத் தேவைகள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கும் இந்த சேவையின் கீழ் வசதி செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வழக்கம் போல் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

