உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த 13 நாட்களில் மட்டும் இலங்கைக்கு 115,043 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஜனவரி 1 ஆம் திகதி முதல் 367,804 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் இதுவரையிலான காலப்பகுதியில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், உணவாக பணியாளர்கள், வாகன சாரதிகள், சுற்றுலாப்பயணிகளை வழிநடத்துவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
