அமெரிக்காவில் மேலும் பல அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஆலோசகர்ரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.

உள்துறை, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அமெரிக்காவில் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இது எலோன் மஸ்க்கின் ஆலோசனையாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் ஊகிக்கின்றார்கள். காரணம் கடந்தகாலத்தில் எலோன் தளத்தை வாங்கிய போதும் இவ்வாறான ஆட்குறைப்புகள் வேகமாக நடைபெற்றது அதனை முன்னிறுத்தியே இப்படியான கருத்துகள் பகிரப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *