Categories: Local

அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள புதிய பரஸ்பர வரி – சாதக, பாதகங்களை கண்டறிய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரித்திட்டமானது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபை தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்

குறிப்பாக இலங்கையில் இருந்து அதிகளவாக ஆடை மற்றும் இறப்பர் பொருட்களையே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். இதன் சந்தை மதிப்பு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

பொருளாதாரம் மீண்டுவரும் நிலையில் “இலங்கை மீதான 44% வரி பாரிய ஒரு பின்னடைவை வழங்கும். ஆடை மற்றும் இறப்பர் பொருட்களை ஏற்றுமதி செய்யும் எமது அண்டை நாடுகளான இந்தியாவிற்கு 26% வரியும், பங்களாதேசிற்கு 37% வரியும், தாய்லாந்திற்கு 36% வரியும், இந்தோனோசியாவிற்கு 32% வரியும் விதிக்கப்பட்டுள்ளது..

அதேநேரம் அதிகளவு இறப்பரை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வியட்னாமிற்கு 46% வரி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி டோனட் ட்ரம்ப் இந்த வரிகளைப்பற்றி அறிவிக்கையில்,”நட்புநாடாக இருந்தாலும், பகைவர்களாக இருந்தாலும் எங்கள் உற்பத்திகளுக்கு அதிக வரிகளை அரவிடுகின்றார்கள். அதனால் நாங்களும் எங்கள் கொள்கைகளை மாற்றியமைக்கின்றோம். இதற்க்கு செவிசாய்க்காதவர்களின் சந்தைவாய்ப்பை எங்கள் நாட்டில் இருந்து இல்லாமல் செய்வோம் என” கூறியிருந்தார்.

எது எவ்வாறாயினும் இலங்கை பணவீக்க சிக்கலில் இருந்து மீண்டு வரும் நிலையில் இது ஒரு பாரிய நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்பு இருக்கலாம் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

வெகு விரைவில் இதற்கான மாற்று சந்தை வாய்ப்பை இலங்கை உருவாக்க வேண்டிய நிலை பற்றிய பார்வையை நாம் மேற்கொள்ளவேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன என பொறுத்திருந்து பார்ப்போம்?

7 News Pulse

Recent Posts

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…

1 day ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…

1 day ago

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…

1 day ago

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…

1 day ago

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…

1 day ago

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…

1 day ago