வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இது…
ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது.மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு முன்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் இக்கூட்டம் நடப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.