இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றம் ; லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் குறித்த இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மலையகத்துக்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ள போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணங்கள் மிகவும் மந்தகதியிலேயே கிடைக்கின்றன.

கண்டி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 55,804 குடும்பங்கள் உள்ள போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவு 32,170 குடும்பங்களுக்கு மாத்திரமே கிடைத்துள்ளது. இன்னும் 23,000 குடும்பங்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கவில்லை.

சமையலறை உபகரணங்களைப் பெறுவதற்காக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 50,000 ரூபா மற்றும் பாடசாலை மாணவர்களின் உபகரணங்களுக்காக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 25,000 ரூபா இதுவரை கண்டி மாவட்டத்தின் எந்தவொரு குடும்பத்துக்கும் கிடைக்கவில்லை. அது மாத்திரமின்றி உயிரிழப்பொன்றுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட இழப்பீட்டு தொகைகளும் மிகக் குறைவாகவே வழங்கபட்டுள்ளன. பெரும்பாலானோருக்கு அந்த தொகையும் கிடைக்கவில்லை.

2 thoughts on “இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றம் ; லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *