Categories: WORLD

இந்தியாவின் கொட்டி தீர்த்த அடைமழை : இருபத்திற்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ வெள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவின் எல்லையை ஒட்டிய அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் நடந்த ஒரு தனி சம்பவத்தில் மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அதேநேரம் மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு இன்னும் பிற இடங்களில் சீரற்ற வானிலை காரணமாக மொத்தமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை நிறுவனம் வரும் நாட்களில் இப்பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று முன்னெச்சரிக்கை செய்துள்ளமையும்ன குறிப்பிடத்தக்கது.

Doneproduction

Recent Posts

Siyapatha Finance Opens 54th Branch in Dynamic City of Kaduwela

Premier finance company Siyapatha Finance PLC recently opened its newest branch in Kaduwela, expanding its…

51 minutes ago

கொழும்பு Marina Square இற்கான LV power distribution தொகுதியை வடிவமைத்து, வழங்கும் பொறுப்பு DIMO நிறுவனத்திடம்

இலங்கையின் முன்னணி பல்வகைத்துறை வணிக குழுமமான DIMO, கொழும்பிலுள்ள Marina Square சொகுசு குடியிருப்புத் தொகுதி மற்றும் வணிக வளாக…

56 minutes ago

கொழும்பில் “Pentara Residencies Thummulla Handiya”அறிமுகம் செய்யும் ஹோம் லேண்ட்ஸ் – இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய தனி முதலீடு

இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில்…

6 days ago

14 வது வருடமாகவும் தரம் 05 மாணவர்களுக்காக இலவசமாக விநியோகிக்கப்படும் முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு

கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தால் தொடர்ந்து 14 வது வருடமாகவும் தரம் 05 மாணவர்களுக்கான இலவசமாக விநியோகிக்கப்படும்…

6 days ago

Kia unveils the all-new 2026 Sportage and Carnival Hybrids in Sri Lanka

Sets new benchmarks in SUV and MPV design, technology and hybrid performance Kia has marked…

6 days ago

ஆச்சரியமிக்க உள்ளக தளபாட தீர்வுகளைக்காட்சிப் படுத்தும் வகையில் இலங்கையில் தனது முதல் அதிநவீன அனுபவ மையத்தை அறிமுகப்படுத்தும் Hettich.

Hettich அனுபவ மையம், அதிநவீன Hettich இணைப்புகளுடன் பொருத்தப்பட்ட தளபாடங்களின் சிறந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உலகின் முன்னணி தளபாட…

1 week ago