நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுரை வழங்கியது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பிரிட்டன் மக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.


**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.