இந்தோனேசியாவில் மண்சரிவு – 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

மலைப்பாதையில் பயணித்த பல மகிழுந்துகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *