உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
இனி வெறும் நயன்தாராதான்…!

இவ்வளவு காலமும் தன்னை ரசிகர்களும், ஊடகங்களும் Lady Superstar என பட்டமளித்து பாராட்டி அழைத்து வந்தமைக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா,. இனிவருகின்ற காலங்களில் தன்னை வெறுமனே நயன்தாரா என மாத்திரம் அழைக்குமாறு நேற்று (மார்ச் 4) உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அண்மைக்காலமாக இவ்வாறு பல சினிமா பிரபலங்கள் தங்கள் பெயரின் முன்னாள் இருந்த பட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
“தல” அஜித் – அஜித் குமார் அல்லது AK என தன்னை அழைக்கும் படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, அதனை Good Bad Ugly திரைப்படத்திலும் ஆழமாக அப்பதிவுசெய்திருப்பர்(இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர்). தொடர்ந்து “ஜெயம்” ரவி – ரவி மோகன் என அழைக்கும்படி அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது நயன்தாரா தன்னுடைய பட்டத்தை தவிர்க்கும்படி தெரிவித்திருக்கின்றார்.