டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
இரவுநேர நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியிலுள்ள வீட்டில் நேற்று, இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நேரப்படி, இரவு 12 மணியளவில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திடீரென அங்கிருந்தவர்கள் மீது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.