65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழு.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமாக இலங்கை வந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது “இலங்கையின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல், கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டின் முக்கிய அதிதியாகவும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டை நிதியமைச்சு, மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஜூன் 16) கொழும்பில் நடைபெறவுள்ளது.


I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.