நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் கிறீம் – லோஷன்கள் வாங்குபவர்களுக்கு விசேட அறிவித்தல்
இலங்கையில் கிறீம்களில் கன உலோகங்களின் அளவு அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சந்தையில் இருந்து பெறப்பட்ட சருமப் பூச்சு கிறீம்கள் மற்றும் லோஷன்களின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, பரிசோதிக்கப்பட்ட கிறீம்கள் மற்றும் லோஷன்களின் வியாபாரப் பெயர்களும் அவற்றில் உள்ள கன உலோகங்களின் அளவும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட கன உலோக அளவுகளுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கன உலோக அளவை விட அதிகமான அளவிலுள்ள கிறீம்கள் மற்றும் லோஷன்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தகவலறிந்த நுகர்வோருக்கு இதன்மூலம் அறிவிக்கின்றது.
இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய விற்பனையாளர்கள் மீது சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது

