வெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற ஊடகவியலாளர்கள் சந்திந்தப்பின் போது உள்ளுராட்சிமன்ற அதிகாரசபை தேர்தல் பற்றிய ரோஹண ஹெட்டியாராச்சி வழங்கினார்.
உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளின் சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அன்றில் இருந்து 52 – 66 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு சட்டமூலம் அடங்கிய வர்த்தமானி வெயிடப்பட்ட பின் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துவிடும். அதன் பின் அவர்கள் அதற்க்கான ஆயத்தங்களை செய்வார்கள்.குறிப்பாக குறித்த சட்ட மூலத்தில் 3 மாதங்களுக்குள் வேட்புமனுவைக் கோருவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும். ஆனால் அவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள், தமிழ் – சிங்கள புத்தாண்டு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தேர்தல் ஆணைக்குழுவின் கடைமையாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இளைஞர் மற்றும் பெண்களுக்கான கோட்டா தொடர்பில் வேட்புமனுவின் போது கட்சிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். காரணம் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுகளை மிக அவதானமாக வரையறையிட்டு செய்யவேண்டும் என்றும் அதனை தாம் கண்காணிப்போம் என்றும் கூறினார்.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…