எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
அத்துடன் தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை காலம் வழக்கம் போல் தீர்மானிக்கப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
இதன்படி, 40 கிலோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும் 40 முதல் 100 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரமாக இருந்தால் ஒரு நாள் விடுமுறையும் 100 முதல் 150 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரமாக இருந்தால் 1,1/2 நாட்கள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு அதிகமாக இருப்பின் 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.
வாக்களிப்பது ஒரு நாட்டு பிரைஜையின் உரிமையுடன் கூடிய கடமையாகும். குறிப்பாக ஏனைய தேர்தல்களோடு ஒப்பிடும்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வாக்குவீகிதம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் மக்கள் அதிக கவனமாக வாக்களிக்கவேண்டிய தேர்தலே இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலே.
காரணம் மக்கள் அடிப்படை மற்றும் அவர்கள் வாழும் சூழலை சிறப்பாக வைத்திருக்க நாடவேண்டிய முதல் இடம் உள்ளூராட்சிசபைதான்.
உரிமைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்ட தட்டிக்கேற்பதற்கு முதலில் வாக்களிக்கவேண்டும்.
எம் வாக்கு எமது உரிமை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம்…
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப்…
ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான…
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று…
கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின்…