நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஊடகங்களில் வெளிவந்த தவறான தகவல் – மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தான் முன்வைத்த தவறான தகவலுக்கு மன்னிப்பை கோரியுள்ளார்.
வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான BMW கார் 5 மில்லியன் ரூபாகளுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக தயாசிறி கூறியமை தொடர்பிலேயே, அவர் மன்னிப்பை கோரியுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தவறான செய்திகளால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக, பதிவைத் திருத்துவதற்கு தான் முனைவதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
குறித்த BMW கார் 21.8 மில்லியன் ரூபாகளுக்கு விற்கப்பட்டதாக, வட மத்திய மாகாண சபை உறுதிப்படுத்திய நிலையிலேயே, அவரின் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த வாகன ஏல செயல்முறையில் 124 மில்லியன் ரூபாய்கள் ஈட்டியதாகவும், அது வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதாகவும் மாகாண சபை கூறியுள்ளது.


Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?