வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இது…
ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சுகவீனமின்மையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது – “இன்று காலையில் நீரிழப்பு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று அதிக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்திய ஊடகங்களும், சமூகவலைத்தள வாசிகளும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக கதையை சித்தரித்து ARR -இன் இரசிகர்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிவிட்டனர்.