ஐரோப்பிய குளிர்காலச் சுற்றுலா: கஸகஸ்தானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்திறங்கியது முதல் குழு!

ஐரோப்பாவில் குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதல் விமானம் நேற்று வியாழக்கிழமை (25) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் வந்தடைந்தது. 

கஸகஸ்தானின் அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா நிறுவனத்திற்குச் சொந்தமான KC-167 ரக விமானம் மூலம், மாலை 4.10 மணியளவில் இந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர். 

இந்த விமானத்தில் 182 பயணிகளும் 08 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விமான சேவையானது வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை கஸகஸ்தானின் அல்மாட்டியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “ஐரோப்பிய குளிர்காலச் சுற்றுலா: கஸகஸ்தானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்திறங்கியது முதல் குழு!

  1. Yo, qq88app! Just tried it out, pretty slick. Found some cool games and the navigation wasn’t a headache. Def worth checking out if you’re looking for something new. Check it out here: qq88app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *