Categories: Local

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அரநாயக்க பொலிஸ் பிரிவின் அரம பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் டுபாயில் பதுங்கியுள்ள திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் உள்ள அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் அரநாயக்க, அரம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய திருமணமானவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதான சந்தேக நபர் 40இற்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர் என எமது அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (04) மாவனெல்ல மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Doneproduction

Recent Posts

வடக்கு கிழக்கில் தேசிய அரசியலிலும், பிரதேச அரசியலிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. – பிமல் ரத்நாயக்க

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று…

12 hours ago

IPL போட்டி நடைபெறும் இடங்களில் மாற்றம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் 'ஒப்பரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின்…

12 hours ago

நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என மக்கள் தீர்ப்பு – இரா.சாணக்கியன்

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்…

12 hours ago

பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…

22 hours ago

யாழ்ப்பாணம் மாநகர சபை இறுதி முடிவு.

கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் . தமிழ் அரசுக் கட்சி 13 (10 வட்டாரம் + 3 போனஸ்)தமிழ் காங்கிரஸ் 12…

23 hours ago

ஹம்பாந்தோட்டை – ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஹம்பாந்தோட்டை - ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக்…

1 day ago