“கடுமையானகாலநிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து, இலங்கையின்ஆடைத்துறைதொழில்துறைரீதியிலானநிவாரணம்மற்றும்மீட்புபணிகளை ஆரம்பித்துள்ளது”

இலங்கையின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்காக, ஒருங்கிணைந்த மீட்புப் பணியை ஆடைத் தொழில்துறை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) அறிவித்துள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் பல மாவட்டங்களில் போக்குவரத்துத் தடை குறித்த செய்தி அறிக்கைகள் வந்ததையடுத்து, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து இந்தத் துறையின் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்கும் என்று JAAF உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களை அடையாளம் காணவும், உடனடித் தேவைகளை மதிப்பிடவும், உரிய நேரத்தில் உதவிகளை உறுதிப்படுத்தவும் JAAF அனைத்து உறுப்பினர் அமைப்புகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகள் சாதாரணமாக இயங்கத் தொடங்கியுள்ளன; ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே அணுகல் மற்றும் பிற உட்கட்டமைப்பு தொடர்பான சவால்களை இன்னும் எதிர்கொள்கின்றன. நாடளாவிய ரீதியில், நிறுவனங்கள் ஏற்கனவே இடப்பெயர்வுக்கு உள்ளான தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு உணவு, உடை, தற்காலிகத் தங்குமிடம், போக்குவரத்து உதவி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கி வருகின்றன.

நிவாரணப் பணிகளை நெறிப்படுத்த, பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பற்றி அறிவிக்கவும், மாவட்ட அளவிலான பாதிப்புப் புதுப்பிப்புகளைப் பகிரவும், உறுப்பினர் நிறுவனங்களுக்காக JAAF மத்திய நிலையங்களை நிறுவியுள்ளது. இந்தச் செயல்முறையானது வளங்களை விரைவாகத் திரட்ட உதவுகிறது, மேலும் எந்தவொரு ஊழியரோ அல்லது குடும்பமோ கவனிக்கப்படாமல் இருப்பதைத் தவிர்க்கவும் உறுதி செய்கிறது.

அணுகல் இன்னமும் கடினமாக உள்ள பகுதிகளில், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பற்றிய உடனடித் தகவல்களை வழங்குவதன் மூலமும், தேசிய நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் JAAF அரசாங்க அதிகாரிகளுடன் தீவிர தொடர்பில் உள்ளது.

அந்தச் சங்கம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “எங்கள் தொழில்துறையின் மீள்தன்மை எங்கள் மக்களிடமிருந்து வருகிறது. இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் துணை நிற்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், மேலும் உடனடி மீட்பு மற்றும் நீண்ட கால ஒத்துழைப்பை உறுதிப்படுத்த எங்கள் உறுப்பினர்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.”

2 thoughts on ““கடுமையானகாலநிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து, இலங்கையின்ஆடைத்துறைதொழில்துறைரீதியிலானநிவாரணம்மற்றும்மீட்புபணிகளை ஆரம்பித்துள்ளது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *